ஈப்போ பாராட் மஇகா பொருளாளர் கொலைவழக்கில் மூவருக்குத் தூக்கு

caseநான்காண்டுகளுக்குமுன் ஈப்போ பாராட் மஇகா பொருளாளர் என். சிதம்பரத்தைக் கொலை செய்த குற்றத்துக்காக ஈப்போ உயர் நீதிமன்றம் மூவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.

விற்பனையாளரான ஏ.மணிமாறன்,24,  வியாபாரியான எஸ்.சரவணன்,29, பாதுகாவலரான கே.பெருமாள், 31 ஆகிய மூவரும் 2009, ஜனவரி 11-இல் இரவு மணி 11.30 அளவில் ஈப்போ, புந்தோங்கில் ஜாலான் வாயாங்கில் உள்ள ஒரு வீட்டில் சிதம்பரத்தைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

அவர்கள் குற்றவாளிகள் என நிறுவப்பட்டதை  அடுத்து நீதித்துறை ஆணையர் தியோ சே எங், அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.