‘பெர்க்காசா என வரும் போது போலீசாரின் இரட்டைத் தரம்’

1 limநிருபர்களுக்கு எதிரான வன்முறையில் சம்பந்தப்பட்டவர்கள் எனக்  கூறப்படுகின்றவர்கள், தமக்கு மிரட்டல்களை விடுத்தவர்கள் ஆகியோர் மீது  குற்றம் சாட்டுவதில் போலீசார் ‘செயலற்றுப் போவது’ குறித்து பினாங்கு  முதலமைச்சர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.

மே 5ம் தேதி நடந்த 13வது பொதுத் தேர்தலில் தேர்தல் மோசடிகள் எனக் கூறப்படுவது மீது நாடு முழுவதும் நிகழ்ந்த ‘505 கறுப்பு தின’ பேரணிகளில் பங்கு  கொண்ட எதிர்த்தரப்பு (பக்காத்தான் ராக்யாட்) தலைவர்கள் மீது – விரைவாக-  இரண்டு மாதங்களுக்குள் குற்றம் சாட்டும் கூட்டரசு அரசாங்கம், சட்டத்துறைத்  தலைவர் ஆகியோர் பின்பற்றும் இரட்டைத் தரங்கள் ‘மிகவும் அப்பட்டமானவை’ என லிம் சொன்னார்.

“ஆனால் பிஎன் ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  சம்பவங்களில் புலனாய்வுகள் தாமதப்படுத்தப்படுவதோடு ‘மேல் நடவடிக்கை  இல்லை’ என்ற முத்திரையும் குத்தப்பட்டுவதாக லிம் ஒர் அறிக்கையில்  தெரிவித்தார்.