திரெங்கானு எம்பி: வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை அளிப்பது தப்பல்ல

mbதிரெங்கானு மந்திரி புசார் அஹமட் சைட், வேண்டப்பட்டவர்களுக்குக் குத்தகைகள் வழங்கும் பழக்கத்தைத் தற்காத்துப் பேசியுள்ளார். அரசியலில் நிலைத்திருக்க அவ்வாறு செய்வது அவசியம் என்றாரவர்.

“ஒரு வேலை இருக்கிறது. அதை பாஸ் குத்தகையாளருக்குக் கொடுத்தேன் என்றால் நான் முட்டாள்.அதிகாரத்தைப் பெறுவது, அதில் நிலைத்திருப்பது…. இதுதான் அரசியல்”, என்றார்.

கோலா பெசுட் அனைத்துலக சுற்றுலா நுழைவாயில் திட்டத்தால் அம்னோவுக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே பயனடைவர் என்று பாக்க சட்டமன்ற உறுப்பினர் சைபுல் பஹ்ரி மாமாட் நேற்று கூறியதற்கு  மந்திரி புசார் இவ்வாறு பதிலளித்தார்.