‘ஈவிரக்கமற்ற கொடூரமான’ அந்தத் தலைமை ஆசிரியரை இடைநீக்கம் செய்யுங்கள் என்கிறார் மஇகா தலைவர் ஒருவர்

news23713eமுஸ்லிம் அல்லாத மாணவர்களைப் பள்ளிக்கூட குளியலறையில் தங்கள் உணவை  சாப்பிடுமாறு செய்த ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளியின் தலைமை ஆசிரியர்  உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என மஇகா தலைமைப்  பொருளாளர் ஜாஸ்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த விவகாரம் மீது கல்வி அமைச்சின் விசாரணை முடிவுகளுக்கு காத்திருப்பதாக  ஒர் அறிக்கையில் செனட்டருமான அவர் கூறினார்.

“அந்தப் பிரச்னை ஏதுமறியாத பிள்ளைகளுடைய படங்களுக்கு அப்பாலும்  செல்கின்றது. அந்தப் பிள்ளைகள் உண்மையில் துன்புறுத்தப்பட்டுள்ளனர்,” என  அவர் சொன்னார்.

தமக்கு வேறுபாடான நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களை வேண்டுமென்றே  அலட்சியம் செய்வது, மதிக்காதது ஆகியவையே பிரச்னையின் முக்கிய  அம்சமாகும் என ஜாஸ்பால் சொன்னார். சுருக்கமாகச் சொன்னால் அது  வெறித்தனம் என்றார் அவர்.