இது இனம், சமயம் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல: துணை அமைச்சர்

kamalanகுளியலறை தற்காலிக சிற்றுண்டி நிலையமாக பயன்படுத்தப்படுவது இன, சமய சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல என்று கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன் கூறுகிறார்.

மார்ச் மாதத்திலிருந்தே அந்த இடம் ஒரு தற்காலிக சிற்றுண்டி நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.  கமலநாதன்  எஸ்கே ஸ்ரீபிரிஸ்தானாவில் செய்தியாளர்களிடம் பேசினார்.

சிற்றுண்டி  நிலையத்தைப்  புதுப்பிக்கும் வேலை இரண்டு வாரங்களுக்குமுன் தொடங்கியதாக அவர் சொன்னார்.

அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்துக்கும் அது பற்றித் தெரியம்.