குழந்தை மதம் மாற்ற தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்ய வேண்டாம் என குலசேகரன் ஏஜி-க்கு வேண்டுகோள்

indiraஎம் இந்திரா காந்தியின் குழந்தைகள் மதம் மாற்றம் செய்யப்பட்டது  அரசமைப்புக்கு முரணானது என நேற்று வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து  முறையீடு செய்ய வேண்டாம் என அவருடைய வழக்குரைஞரான எம்  குலசேகரன் ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவரை வலியுறுத்தியுள்ளார்.

தாய்க்கும் அவரது மூன்று பிள்ளைகளுக்கும் நியாயம் கிடைக்க முறையீடு செய்யக்  கூடாது என ஈப்போ பாராட் எம்பி-யுமான அவர் சொன்னார்.

indira1இந்திரா காந்தி தமது துயரம் குறித்து கூட்டரசு நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக  கேள்விகளை எழுப்ப முயன்ற போது ஏஜி அலுவலகப் பேராளர்கள், அந்த  விவகாரம் உயர் நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறி அதற்கு  ஆட்சேபம் தெரிவித்ததாக குலசேகரன் சொன்னார்.

“இப்போது ஈப்போ உயர் நீதிமன்றம் ஒரு முடிவு செய்துள்ளது. நியாயத்தின்  அடிப்படையில் ஏஜி அந்தத் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யக் கூடாது.  இந்திரா காந்தி நீண்ட காலம் துயரத்தை அனுபவித்து விட்டார்,” என  மலேசியாகினி தொடர்பு கொண்ட போது அவர் தெரிவித்தார்.