ஐஜிபி: ‘சஞ்சீவன் சுடப்பட்டதற்கு அவசரப்பட்டு போலீஸ்மீது பழிபோடாதீர்’

igpஆர்.ஸ்ரீசஞ்சீவன்மீது மேற்கொள்ளப்பட்ட  கொலைமுயற்சிக்குப்  போலீசைக் குறை சொல்ல வேண்டாம்  என தேசிய போலீஸ் படைத்  தலைவர் காலிட் அபு பக்கார் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“மைவாட்ச் தலைவர் சுடப்பட்டதற்கு போலீஸ்தான் காரணம் என்று அவசரப்பட்டு குற்றம் சாட்டாதீர்கள்”.

இன்று காலை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் காலிட் செய்தியாளர்களிடம் பேசினார். அதில் போலீசார் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை விடப்போவதில்லை என்றாரவர்.

“குற்றம் செய்த எவரையும் நாங்கள் பாதுகாத்ததில்லை.

“சஞ்சீவன் விரைவில் குணமடைய வேண்டும். அப்போதுதான் அவரைச் சந்தித்து தகவல் பெற முடியும்”, என்று அவர் மேலும் கூறினார்.