போலீசார்: Ambank வங்கியைத் தோற்றுவித்தவருடைய புதல்வர் மலேசியாவுக்கு வர வேண்டும்

murderகொலையுண்ட ஹுசேன் அகமட்டின் புதல்வர் பாஸ்கால் நஜாடி மலேசியாவுக்குத்  திரும்பி தமது தந்தையின் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு உதவ  வேண்டும் என கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே  விரும்புகிறார்.

ஹுசேன் அகமட் Ambank வங்கியைத் தோற்றுவித்தவர் ஆவார்.

“உண்மையில் என்ன நடந்தது என்பதை நாங்கள் அறிந்து கொள்ள
மலேசியாவுக்குத் திரும்பி போலீசாருடன் ஒத்துழையுங்கள்.” என முகமட் கேட்டுக் கொண்டார்.murder1

“எங்களைச் சந்தியுங்கள். போலீஸ் விசாரணைக்கு உதவ நாங்கள் அவரைப் பேட்டி  காண்போம்,” என நேற்றிரவு மஸ்ஜித் இண்டியா வட்டாரத்தில் மக்களுடன் நடந்து  சென்ற பின்னர் அவர்  நிருபர்களிடம் பேசினார்.

தமது தந்தையின் மரணம் முடியாமல் போன நில விவகாரத்துடன் சம்பந்தப்பட்டது  எனக் கூறப்படுவதை பாஸ்கால் மறுத்துள்ளது பற்றி மலேசியாகினி வினவிய போது  முகமட் அவ்வாறு பதில் அளித்தார்.

“எங்கள் நிறுவனம் அத்தகைய தொழிலில் ஈடுபடாததால் என் தந்தையின்  கொலையில் முறிந்து போன நிலப் பேரம் ஏதுமில்லை,” என பாஸ்கால்  சொன்னதாக பெர்னாமா வியாழக் கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.