ஒரே மாதத்தில் 23 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: எம்பி கணக்கெடுப்பு

shootingஒரே  மாதத்தில்  23 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன அதாவது ஒவ்வொரு நாளும் கிட்டதட்ட ஒருவர் சுடப்பட்டிருக்கிறார்.

ஜூன் 30- இலிருந்து ஜூலை 31வரை, செய்தித்தாள்களிலிருந்து பெறப்பட்ட தகவல் இது  என்கிறார்  பாயான் பாரு எம்பி, சிம் ட்சே ட்சின்.  இவற்றில் 10 பேர் இறந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.

“இது ஒன்றும் கற்பனை அல்ல; இதுதான் உண்மை நிலவரம்”, என்றவர் குறிப்பிட்டார்.

அவசரகாலச்  சட்டம் எடுக்கப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்று  சொல்லிக் கொண்டிருக்காமல், குற்றங்களை இழைத்தவர்கள்மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிம் வலியுறுத்தினார்.