அமைதியாக ஒன்றுகூடும் சட்டத்தின் கீழ் பிகேஆர் இளைஞர் பிரிவின் மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

PKR3மலாயாப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள அர் ரஹ்மான் பள்ளிவாசலில்  ஜுன் 22ம் தேதி கூடியதற்காக அமைதியாக ஒன்றுகூடும் சட்டத்தின் கீழ் மூன்று  பிகேஆர் இளைஞர் தலைவர்கள் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது.

29 வயது நஸ்ரி முகமட் யூனுஸ், 38 வயது சம்சுல் இஸ்காண்டார் யூஸ்ரி, 36 வயது  கைரி அனுவார் ஜைனுடின் ஆகிய அந்த மூவர் மீது கோலாலம்பூர் செஷன்ஸ்  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதி ஒன்றில் கூடுவது தொடர்பான அந்தச் சட்டத்தின் பிரிவு  4 (2) (b)-யின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த மூவரும் குற்றச்சாட்டை மறுத்தனர். ஈராயிரம் ரிங்கிட் சொந்த
உத்தரவாதத்துடன் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

அது செப்டம்பர் 23ம் தேதி வழக்கு நிர்வாகத்துக்கு சமர்பிக்கப்படும் என்றும்  விசாரணை டிசம்பர் 11ம் தேதி தொடங்கும் என்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி  மாட் கனி அப்துல்லா அறிவித்தார்.