ஓராங் அஸ்லிகளுக்கு புதிய ஆணையம் தேவை: சுஹாகாம்

asliமலேசிய  மனித  உரிமை  ஆணையமான சுஹாகாம், ஓராங் அஸ்லிகள் தொடர்பான சட்டங்கள், கொள்கைகள் ஆகியவை பற்றி அரசாங்கத்துக்கு ஆலோசனை கூற ஒரு புதிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

பூர்விகக் குடியினரின் நில உரிமைகள் குறித்து இரண்டாண்டுகளாக விசாரணை நடத்திய சுஹாகாம், 18 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை பிரதமர்துறை அமைச்சர் பால் லவ்- இடம் நேற்று வழங்கியது.

ஓராங் அஸ்லி மேம்பாட்டுத்துறை, பூர்விகக் குடியினரின் நலன்காக்கவும் நலன்பேணவும் தவறிவிட்டது எனவும் அது குறைகூறியுள்ளது.