சாமிவேலு: என் ஒய்வுத் தேதி என் தனிப்பட்ட உரிமை

samy2008 பொதுத் தேர்தலுக்கு ஒராண்டு முன்னதாகத் தம்மை ஒய்வு பெறுமாறு  முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி கேட்டுக் கொண்டதாகக்  கூறப்படுவதை முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு மறுத்துள்ளார்.

“பாக் லா ஒய்வு பெறுமாறோ அல்லது வேறு எதுவுமோ என்னைக் கேட்டுக்  கொள்ளவில்லை. நான் எப்போது ஒய்வு பெற வேண்டும் என யாரும் என்னிடம்  சொல்ல முடியாது. அது என்னுடைய முழு உரிமை,” என அவர் சொன்னார்.

சாமிவேலு இன்று புத்ராஜெயாவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்த
நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பின் போது நிருபர்களிடம்
தெரிவித்தார்.

‘விழிப்பு: மலேசியாவில் அப்துல்லா படாவியின் ஆண்டுகள்’ என்னும் தலைப்பைக்  கொண்ட புத்தகத்தில் அப்துல்லா அவ்வாறு கூறிக் கொண்டுள்ளதற்கு அவர் பதில்  அளித்தார்.