பாக் லா பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல டாக்டர் மகாதீர் விரும்பவில்லை

pak lahமுன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி தமது புத்தகத்தில் இன்னொரு  முன்னாள் பிரதமரான டாக்டர் மகாதீர் முகமட்டைக் குறை கூறியுள்ளார்.

இப்போதைக்கு அதற்குப் பதில் அளிக்க டாக்டர் மகாதீர் மறுத்து விட்டார்.

“நான் அந்தப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். நான் அது குறித்து காலப்  போக்கில் கருத்துச் சொல்வேன்,” என்றார் அவர்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று வழங்கிய நோன்புப் பெருநாள் திறந்த இல்ல  உபசரிப்பில் மகாதீர் நிருபர்களைச் சந்தித்தார்.

அந்தப் புத்தகத்தை அவர் படித்தாரா என மகாதீரிடம் வினவப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த மகாதீர்,” நான் அந்த புத்தகத்தை வாசிக்கவில்லை,  ஆனால் அது குறித்த செய்திகளை நான் மலேசியாகினி.காம் வழியாக படித்தேன்,”  என்றார்.

அப்துல்லாவின் புதிய புத்தகத்தின் தலைப்பு ‘விழிப்பு: மலேசியாவில் அப்துல்லா  படாவியின் ஆண்டுகள்’ என்பதாகும்.

அதில் மகாதீர் தமது நிர்வாகத்தில் தலையிட்டார் என்றும் ‘தலைக்கனம் பிடித்தவர்’  என்றும் ‘முழுக்க முழுக்க முரண்பாடுகளைக் கொண்டவர்’ என்றும் அப்துல்லா  குறிப்பிட்டுள்ளார்.