மலேசிய படைவீரர் தாய்லாந்து எல்லையில் சுடப்பட்டார்

1 armyஇராணுவ வீரர்  ஒருவர்  மலேசிய- தாய் எல்லையில் சுடப்பட்டுக் கடுமையாகக் காயமடைந்துள்ளார்.

அவர் புக்கிட் காயு ஹித்தாமில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது  அதிகாலை மணி 4.30க்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக பெரித்தா ஹரியான் கூறியுள்ளது.

அந்த 26-வயது வீரர், கம்பிவேலி வெட்டப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறார்.

“அதைச் சரிசெய்ய முயன்றபோது ஒரு வெடிச் சத்தம் கேட்டு ஓடி இருக்கிறார்.

“ஓடிக் கொண்டிருந்தபோது தாய்லாந்து எல்லையிலிருந்து வந்த ஒரு துப்பாக்கிக் குண்டு அவர்மீது பாய்ந்து கீழே விழுந்தார்”, என கெடா குற்றப்புலன் ஆய்வுத் துறை (சிஐடி) தலைவர்  நஷிர் யா தெரிவித்தார்.

சுடப்பட்டவர் கங்கார்,  துவாங்கு பவிசியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.