கைரி: டிஏபி புதிய தேர்தல்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகும்

khairyடிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு புதிய தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது  ‘குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு சமமாகும்’ என அம்னோ இளைஞர் தலைவர்  கைரி ஜமாலுதின் சொல்கிறார்.

அவர் இன்று சன்வே பல்கலைக்கழகத்தில் சன்வே பொதுக் கொள்கை விரிவுரை  நிகழ்வின் தொடக்க விழாவில் நிருபர்களிடம் பேசினார்.

ஆர்ஒஎஸ் என்ற சங்கப் பதிவதிகாரி கேட்டுக் கொண்டுள்ளது போல மத்திய  நிர்வாகக் குழுவுக்கு மறு தேர்தலை நடத்த டிஏபி நேற்று ஒப்புக் கொண்டது.

டிஏபி பதிவு ரத்துச் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அது தான் ஒரே வழி என  அந்தக் கட்சியின் பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா கூறினார்.

தவறு நிகழ்ந்துள்ளதாக ஆர்ஒஎஸ் கூறிக் கொள்வதை அங்கீகரிப்பதாக அதனைக்  கருதக் கூடாது என அவர் மேலும் சொன்னார்.