சூராவ் உரிமையாளரின் ‘பிஆர்’ பறிக்கப்பட்டது

1 surauசூராவில் பெளத்தர்கள் தியானம் செய்வதற்கு இடமளித்த கோத்தா திங்கி செடிலி புசார் ஓய்வுத்தல உரிமையாளரின் நிரந்தர வசிப்பிடத் தகுதி(பிஆர்) பறிக்கப்பட்டது.

தேசிய பதிவுத்துறையுடன் அலோசனை கலந்த பின்னர் அம்முடிவு செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

“பிஆர் தகுதி நன்மை கருதி வழங்கப்படுவது.  அது ஓர் உரிமை அல்ல”, என்றாரவர்.