முன்னாள் இஓ கைதிகளுக்கு போலீஸ் தீவிர வேட்டை

ketua-polis-negaraபோலீசார், “Ops Cantas Khas”என்னும் நடவடிக்கையைத் தொடங்கி,  குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் முன்னாள் அவசரக்காலச் சட்டத் தடுப்புக் கைதிகளைத் தேடிப் பிடிப்பதில்  முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர்.

அந்நடவடிக்கை கடந்த சனிக்கிழமை தொடங்கியது என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.

சந்தேகத்துக்கு உரியவர்கள் தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்களா என்று கண்டறியப்படும் என்றாரவர்.

இந்நடவடிக்கையைப் பொதுமக்கள் வரவேற்பதாகவும் அவர்கள் போலீசுடன் ஒத்துழைப்பதாகவும் அவர் சொன்னார்..