சப்ரி: தேசிய கொடி பறக்கவிடுவதைக் கட்டாயமாக்க வேண்டும்

jalur1மெர்தேகா மாதம் முழுவதும் ஜாலோர் கெமிலாங் பறக்க விடுவதைக் கட்டாயமாக்க சட்டம் கொண்டுவரலாமா என்று தொடர்பு, பல்லூடக அமைச்சு ஆராயும்.

அதன் அமைச்சர், அஹ்மட் சப்ரி சிக், அப்படி ஒரு சட்டம் தேவை என்று நினைக்கிறார்.

“இப்போது,  தன்னார்வத்தின்பேரில்தான் தேசிய கொடி பறக்க விடப்படுகிறது.

“ஆனாலும் தனியார் கட்டிடங்கள் பல ‘ஜாலோர் கெமிலாங்கைப் பறக்கவிடுங்கள்’ என்னும் வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பதில்லை”, என்றவர் டானாவ் கோத்தாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.