தாண்டா புத்ரா, வரலாற்று உண்மை என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்

1putraதாண்டா புத்ரா படம் பார்த்த ஒருவர், அதில் சித்திரிக்கப்படும் மே 13 சம்பவங்கள் “வரலாற்று உண்மை” என்று நம்புகிறார்.

அப்படத்தில் எழுப்பப்படும் விவகாரங்கள் வரலாற்றில் நீங்கா இடம்பெற்றிருக்கும். அதை வருங்கால மக்கள் ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும் என்று சைடி சித்திக் கூறினார்.

“மே 13, 1969-இல் நான் பிறக்கக்கூட வில்லை. அதன் கதை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது”.

இனக் கலவரங்கள் போன்றவை வரலாற்று உண்மைகள் என்பதால் மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை என்றாரவர்.