நாடு மெர்தேக்காவைக் கொண்டாடும் வேளையில் எதிர்காலம் நன்றாக இல்லை என லிம் சொல்கிறார்

limமலேசியாவின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்காது என பினாங்கு முதலமைச்சர்  லிம் குவான் எங் சொல்கிறார்.

காரணம் ‘நாட்டில் தீவிரவாதப் போக்கும் இனவாதப் பிளவுகளும்’ தொடருவதே  அதற்குக் காரணம் என அவர் சொன்னார்.

மலேசியர்கள் இன்று மெர்தேக்கா தினத்தைக் கொண்டாடும் வேளையில்  விடுத்துள்ள உரையில் லிம் அவ்வாறு கூறியிருக்கிறார்.

பொது நம்பிக்கை சம்பந்தப்பட்ட வேலைகளை தூய்மையான, விவேகமான,  ஆற்றலுடைய மக்களிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்ய கூட்டரசு  அரசாங்கம் வெளிப்படையான பொறுப்பான நிர்வாக முறையை பின்பற்ற  வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பல்வகைத்தன்மையை கொண்டாடுவதின் மூலம் பள்ளிக்கூடங்கள் இனப்  பிரிவினையையும் சர்ச்சைகளையும் உருவாக்கும் மய்யங்களாக விளங்குவதற்குப்  பதில் தேசிய ஒற்றுமையை வளர்க்கும் மய்யங்களாக திகழச் செய்ய முடியும்  என்றும் லிம் குறிப்பிட்டார்.