கோயில் உடைக்கப்படுவதைத் தடுக்க முயன்ற பிகேஆர் ஜெயதாஸ் கைது

PKR-Jayadass  arrestedகோலாலம்பூர், ஜாலான் பி.ரமலியில் அமைந்துள்ள ஓர் இந்து கோயில் உடைக்கப்படுவதைத் தடுக்க முயன்ற பிகேஆரின் எஸ். ஜெயதாஸ் மற்றும் கோயில் பிரதிநிதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள அவ்விருவரும் தற்போது டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரன் தெரிவித்தார்.

கோலாலம்பூர் மாநகர் ஆட்சி மன்ற ஊழியர்களால் ஜாலான் பி ரமலியில் அமைந்துள்ள தங்க முக்கோண முனீஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைத் தடுக்கும் முயற்சியில் அவ்விருவரும் ஈடுபட்டனர்.

“இப்போது பெரும் குழப்பமாக இருக்கிறது” என்று அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது கூறினார். அவர் பேசிக் கொண்டிருக்கையில் அங்கு பெரும் கூச்சல் சத்தம் கேட்டது.