முன்னாள் தலைமை நீதிபதி: அதிகமான தேர்தல் மனு செலவுத் தொகை நியாயமானது

azmiதேர்தல் மனுக்களை விசாரிக்கும் தேர்தல் நீதிமன்றங்கள் விதிக்கும் அதிகமான  செலவுத் தொகைகளை முன்னாள் தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி ஆதரித்துப்  பேசியிருக்கிறார்.

தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கு அவை உதவும் என்றும் அவர் கூறிக்  கொண்டார்.

அதிகமான செலவுத் தொகை தீவிரமாக இல்லாத மனுதாரர்களை தடுத்து நிறுத்தி  விடும் என அவர் பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

“நான் இன்று வரையில் ஏன் நான் ஒய்வு பெறுவதற்கு முன்பு கூட நீதிமன்றங்கள்  உத்தரவிடும் செலவுத் தொகைகள் மிகவும் குறைவாக இருப்பதாக நான்  எண்ணியிருக்கிறேன். நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்குரைஞர்களுக்குக்  கட்டணமாக, சில வேளைகளில் நூறாயிரக்கணக்கான ரிங்கிட்  கூட கொடுக்கப்படுகின்றது.”

“உத்தரவிடப்படும் செலவுத் தொகைகள் குறைவாக இருந்தால் மக்கள் அதனை  தவறாகப் பயன்படுத்தி நல்ல காரணங்கள் இல்லாமல் தேர்தல் மனுக்களை  சமர்பிப்பர். வழக்குகளைச் சமர்பிப்பதற்கான உரிமையை நீங்கள் தவறாகப்  பயன்படுத்துகின்றீர்கள்,” என்றார் ஸாக்கி அஸ்மி.