ஜாஹிட்: போலீஸ் கரத்தை வலுப்படுத்த பிசிஏ திருத்தப்படும்

zahidகுற்றத்தை எதிர்ப்பதில் போலீசின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில்  1959 ஆம் ஆண்டு குற்றத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

“தீவகற்பத்தில் மட்டுமே அமலில் உள்ள இச்சட்டம் சாபா, சரவாக்குக்கும் விரிவுபடுத்தப்படும்”, என்றாரவர்.

ஆனால், அச்சட்டத்தின்கீழ் சந்தேகத்துக்குரியவர்களைக் கைது செய்யவும் 72-நாள்களுக்குத் தடுத்து வைக்கவும் போலீசுக்குள்ள அதிகாரம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.