சொய் லெக்: எண்ணெய் விலையேற்றத்தை அரசியலாக்காதீர்

soi lekமசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்,  எண்ணெய் விலை உயர்வை அரசியலாக்கி அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பை விதைக்க வேண்டாம் என மாற்றரசுக் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரோன்95. டீசல் ஆகியவை விலை உயர்ந்தது தொடர்பில் பல தரப்பினர், குறிப்பாக மாற்றர்சுக் கட்சியினர் கேள்வி எழுப்புவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாரவர்.

பொருளாதார நிலைத்தன்மைக்கு உதவித் தொகைகள் படிப்படியாக அகற்றப்படுவது அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றாரவர்.