சமட் சைட் விசாரணைக்குப் பின்னர் பின்னிரவு 2.30க்கு விடுவிக்கப்பட்டார்

samadதேசிய இலக்கியவாதியான ஏ.சமட் சைட்,  விசாரணைக்காக டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

“டாங் வாங்கி போலீஸ் நிலயத்துக்குச் செல்கையில் என்னைக் கைது செய்தார்கள்”, என்று சமட்  மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இரவு 12.30க்கு போலீசார் அவரைக்  கைது செய்தனர். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துகொண்டு இரவு 2.30க்கு விடுவித்தனர்.

கடந்த வாரம் “சாங் சாகா மலாயா” கொடியைப் பறக்க விட்டதன் தொடர்பில் சமட் தேடப்பட்டு வந்தார்.