‘துணிச்சலற்ற’ மஇகா ஸ்ரீபிரிஸ்தானா விவகாரத்தை மசீச-விடம் விட்டு விட வேண்டும்

gunaஸ்ரீபிரிஸ்தானா பள்ளியில் குளியலறை சிற்றுண்டி நிலையமாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரத்துக்குத் தீர்வு காணும் பொறுப்பை மசீச ஏற்பது நல்லது என இந்திய என்ஜிஓ ஒன்று கூறுகிறது.

மஇகா தலைவர்கள் “துணிச்சலற்றவர்கள்” என்பதால் அவ்விவகாரத்துக்கு அவர்கள் தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை என மலேசியன் தமிழ் டுடே அமைப்பின் செயலாளர் கே.குணசேகரன் குறிப்பிட்டார்.

“கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன், எதுவும் செய்ய முடியாதிருக்கிறது என்று கூறிவிட்டார்.

“அவர் சொல்வதை அவரது அமைச்சின் அதிகாரிகள் கேட்பதில்லை என்பதே அதன் பொருள். அதாவது, அவர் வெறும் கைப்பாவைதான்”.

அவ்விவகாரத்தைத் துணிச்சலுடன் எடுத்துப்பேசும் மசீச இளைஞர் துணைத் தலைவர் வீ கா சியோங்கையும் மகளிர் உதவித் தலைவர் ஹெங் சியாய் கை-யையும் தாம் உயர்வாக மதிப்பதாய்  குணசேகரன் கூறினார்.