பாக் சமட்டிடம் இப்படியா நடந்துகொள்வது? அம்பிகா ஆத்திரம்

ambikaதேசிய இலக்கியவாதியான ஏ.சமட் சைட் இரவு பின்னேரத்தில் தடுத்துவைக்கப்பட்டது பற்றிக் கருத்துரைக்க முனைந்த பெர்சே இணைத் தலைவர் எஸ்.அம்பிகாவால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.

“மரியாதைக்குரிய ஒரு மனிதரிடம் இப்படியா நடந்துகொள்வது”, என்றவர் பொறிந்து தள்ளினார். “பின்னிரவு 12.30க்கு அவரது வீட்டுக்குச் சென்று விசாரணைக்காக அவரைக் கைது செய்து இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் அவரை விடுவிக்க வேண்டிய அவசியம் என்ன?

“இது அப்பட்டமான அலைக்கழிப்பு. முற்றிலும் தேவையற்ற ஒன்று…….போலீசுக்கும் அது தெரியும்.  ஒரு சின்ன விசயத்துக்காக அம்மனிதரைத் தொந்திரவு செய்திருக்க வேண்டியதில்லை”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.