‘ஆலய விவகாரம் பிஎன் மற்ற சமயங்களை மதிக்கவில்லை என்பதைக் காண்பிக்கிறது’

templeகோலாலும்பூரில் 100ஆண்டு பழமை வாய்ந்த முனீஸ்வரர் காளியம்மன் கோயிலின் “புனிதத்தன்மையைக் கெடுக்கும்” வகையில் நடந்துள்ள செயல்கள் பிஎன் அரசு மற்ற சமயங்களுக்கு மதிப்பளிப்பதில்லை என்பதைக் காண்பிக்கிறது என டிஏபி சாடியுள்ளது.

கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் தெய்வச் சிலைகள் கவனமாக, சிதைக்கப்படாமல்தான் அகற்றப்பட்டன என்று சொன்னாலும் த ஸ்டார் செய்தி ஒன்று நான்கு சிலைகள்  “பகுதி உடைந்திருப்பதைக் காட்டின”என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.