மகாதிர்: ‘புரொஜெக்ட் ஐசி பற்றி அறியேன்’

1 dr mகள்ளக் குடியேறிகளுக்குக் குடியுரிமை கொடுப்பதற்குக் காரணமான இருந்தது என்று சொல்லப்படும் ‘புரொஜெக்ட் ஐசி’ அல்லது ‘புரொஜெக்ட் மகாதிர்’ பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று மறுக்கிறார் டாக்டர் மகாதிர்.

சாபாவில், கள்ளக் குடியேறிகள் மீது விசாரணை நடத்தும் அரச ஆணையத்திடம் சாட்சியமளித்த முன்னாள் பிரதமர், “இப்போதுதான் அதைக் கேள்விப்படுகிறேன்”,என்றார்.

எதற்கு அத்திட்டத்துக்கு அப்படி ஒரு பெயர் என்று விசாரணை அதிகாரி வினவியதற்குத் தெரியவில்லை என்று மகாதிர் கூறினார்.

“எது எதற்கோ என் பெயரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இனவாதி, தீவிரவாதி என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.  நான் கவலைப்படவில்லை. அதெல்லாம் அரசியலில் சகஜம்”, என்றார்..