ஊழலை எதிர்த்துப் போராடுவதற்குச் சட்ட அமலாக்கம் மட்டும் போதாது, அது ஒரு விரிவான நேர்மைப் பண்பாடு மற்றும் முறையான நிர்வாக நடைமுறைகள் மூலம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்வார், ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் திறம்படவும் தொடர்ச்சியாகவும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய, பொது மற்றும் தனியார் துறைகள் மற்றும் ஒட்டுமொத்த சமூகம் உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை முக்கியமானது என்று கூறினார்.
இன்று அவர் தலைமையில் நடைபெற்ற தேசிய நிர்வாகத்திற்கான சிறப்பு அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இவ்விவகாரத்தை வலியுறுத்தியதாக அன்வார் தெரிவித்தார். தேசிய நிர்வாகத்தை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ‘சான்றளிக்கப்பட்ட நேர்மை அதிகாரி’ (Certified Integrity Officer) திட்டத்தை செயல்படுத்தவும் இக்குழு ஒப்புக்கொண்டது.
பொது நிதி கசிவு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற சிக்கல்கள் தேசிய நிர்வாகத்தை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் தேசிய ஒருமைப்பாடு உள்ளிட்ட மக்களின் நலனையும் பாதிக்கும் என்று அன்வார் கூறினார்.
“மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டவும், தேசிய நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும், நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை பொதுச் சேவையின் மையமாகத் தொடர்வதை உறுதி செய்ய, நிர்வாக நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
பினாங்கு மாநில அரசின் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பு
மற்றொரு நிகழ்வாக, அரசு நிறுவனங்கள் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் அழைப்பு விடுத்திருந்த போதிலும், பினாங்கு மாநில அரசு தனது திட்டமிட்ட ஐடில்பித்ரி (Aidilfitri) திறந்த இல்ல உபசரிப்பை எளிமையான முறையில் நடத்த முடிவு செய்துள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல்களால் உருவான உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, செலவு குறைப்பு நடவடிக்கையாக அமைச்சகங்கள், அரசு முகமைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் (GLCs) இந்த ஆண்டு ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்புகளை நடத்த வேண்டாம் என்று அன்வார் நேற்று அறிவித்திருந்தார்.
இது குறித்துப் பேசிய பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோவ், இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரிடமிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையும் மாநில அரசுக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.
பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயோவ்
“தனிப்பட்ட முறையில், நிகழ்ச்சிக்கான தேதி ஏற்கனவே மிக நெருங்கிவிட்டது என்று நான் உணருகிறேன். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன, மேலும் அழைப்பு கடிதங்களும் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன”.
மாநில செயற்குழுவும் இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாக விவாதிக்க இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும், பினாங்கு ஆளுநரும் மாநில அரசும் இணைந்து நடத்தும் இந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு (Open House), மக்களுடன் பழகுவதற்கான ஒரு பாரம்பரிய நிகழ்வாகும். இது எப்போதும் ஆடம்பரம் இல்லாமல், எளிமையான முறையிலேயே நடத்தப்பட்டு வருகிறது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மாநிலத் துறைகள் மற்றும் முகமை அளவிலான கொண்டாட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த சாவ், செலவுகளைக் குறைக்கும் வகையில் அத்தகைய கூட்டங்களை உள்வட்டார அளவில் அல்லது “potluck” (ஒவ்வொருவரும் உணவு கொண்டு வருவது) முறையில் ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார்.
சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் தீவிரவாத குழுக்களுக்கு மத்தியில், இன ஒற்றுமையை வலுப்படுத்துவதில் இத்தகைய திறந்த இல்ல தளங்களின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
“மக்களை ஒன்றிணைப்பதற்கும், ஒற்றுமை உணர்வை வளர்ப்பதற்கும் இத்தகைய தளங்கள் முக்கியமானவை”.
“பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலைகளில், இது போன்ற சிறிய அளவிலான கூட்டங்கள் பொதுமக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையைக் கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்குகின்றன,” என்று சாவ் கூறினார்.
























