சைபுதீன்: குடியுரிமை விண்ணப்ப செயல்முறை காலம் 14 நாட்களாகக் குறைக்கப்பட்டது

தேசியப் பதிவுத் துறை (NRD) தொடங்கியுள்ள ஒருங்கிணைந்த பாதுகாப்பு சோதனை முறையின் மூலம் குடியுரிமை விண்ணப்ப செயலாக்க காலம் 73 நாட்களிலிருந்து 14 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. ராயல் மலேசியா காவல்துறை (PDRM) உடன் இணைந்து, NRD உருவாக்கிய அமைப்பைச் செயல்படுத்தியதன் மூலம், விண்ணப்பத்திற்கான செயலாக்க நேரம் இப்போது மிகவும்…

உள்ளூர் இளைஞர்களைக் கவரும் வகையில்  தோட்ட வேலைகள் குறித்து அரசு…

இளைய தலைமுறையினரை கவரும் வகையில் நெகிழ்வான தோட்ட வேலைகளை அறிமுகப்படுத்த மனிதவள அமைச்சு ஆலோசித்து வருவதாகப் பிரதி அமைச்சர் முஸ்தபா சக்முட் தெரிவித்துள்ளார். 3D (அசுத்தமான, ஆபத்தான மற்றும் கடினமான) வேலைகளில் ஈடுபடுவதற்கு, குறிப்பாக இளைய தலைமுறையினர் அந்தத் துறையில் ஆர்வம் காட்டாததால், உள்ளூர் தொழிலாளர்களை நாடுவது சிரமங்களை…

செப்டம்பர் 2023 வாக்காளர் பட்டியல் பரிசீலனைக்கு திறக்கப்பட்டுள்ளது

நேற்று சரிபார்க்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்ட செப்டம்பர் 2023 வாக்காளர் பட்டியல் (DPT BLN9/2023), நவம்பர் 22 வரை அடுத்த 30 நாட்களுக்கு மதிப்பாய்வுக்காகத் திறந்திருக்கும். செப்டம்பர் 1, 2023 முதல் செப்டம்பர் 30, 2023 வரையிலான காலகட்டத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களின் 42,699 பெயர்கள்…

இஸ்ரேலிய போர்க்குற்றங்கள் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் – பெர்சத்து…

அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் கொலம்பியா போன்ற நாடுகள் இதேபோன்ற ஒன்றைச் செய்திருப்பதாகக் குறிப்பிட்டு, இஸ்ரேல் செய்த போர்க்குற்றங்களை மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். மச்சாங் பாராளுமன்ற உறுப்பினர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அகமட் கமால் மலேசியாவும் இதைப் பின்பற்றி சர்வதேச…

பாலஸ்தீனத்திற்காக நன்கொடை வசூலித்த அரசு சாரா நிறுவனத்தை ஆய்வு செய்யும்…

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) பாலஸ்தீனியர்களுக்காக நன்கொடை வசூலித்த அரச சார்பற்ற நிறுவனம் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக பல சாட்சிகளை விசாரித்து வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனம் பெற்ற நிதியை, பெரும்பாலும் பொது நன்கொடைகள் மூலம் எவ்வாறு செலவிட்டது என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளைத் தொடர்ந்து,…

விவசாயிகள் போராட்டத்தில் PSM தலைவர் ஜெயகுமார் உட்பட நான்கு பேர்…

பேராக் மாநிலம் கந்தான், தம்புனில் விவசாயிகளை வெளியேற்றுவதைத் தடுக்க முயன்ற PSM தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ் உட்பட நான்கு பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். மற்ற மூவர் PSM குழு உறுப்பினர் ஆர் கார்த்திகேஸ், பேராக் PSM இளைஞரணி உறுப்பினர் பி கேசவன் மற்றும் ஹோ…

இலக்கு மானியங்கள்: கவனமாகத் திட்டமிட வேண்டும் – இஸ்மாயில் சப்ரி

முன்னாள் பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று புத்ராஜெயாவை இலக்கு வைக்கப்பட்ட மானியங்களைச் செயல்படுத்தும் திட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார், பொருத்தமற்ற அணுகுமுறை மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் மற்றும் மோசமாகப் பாதிக்கலாம் என்று கூறினார். இன்று பிற்பகல் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் 2024…

ICL முறையில் PTPTN கடனைத் திருப்பிச் செலுத்துதல் நடைமுறை –…

தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் (PTPTN) கடன்களை வருமான தற்செயல் கடன் (Income Contingent Loan) மூலம் திருப்பிச் செலுத்துவது நடைமுறைக்குரியது மற்றும் கடன் வாங்குபவர்களுக்குச் சுமையாக இருக்காது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார். தேசிய உயர் கல்விக் கொள்கையில் தேசிய மறுஆய்வுக் குழு (National Review…

பாலஸ்தீனத்திற்கு ரிம 7மில்லியன் மதிப்புள்ள 50 டன் பொருட்கள் அனுப்பப்படும்

Ops Ihsan எனப் பெயரிடப்பட்ட நன்கொடை இயக்கத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட சுமார் 50 டன்கள்  ரிம 7 மில்லியன் மதிப்புள்ள மனிதாபிமான பொருட்கள் இந்த வெள்ளியன்று எகிப்து வழியாகப் பாலஸ்தீனத்திற்கு அனுப்பப்படும். எகிப்து வழியாக அனுப்பப்படும் பொருட்களில் மருந்துகள், குழந்தைகளுக்கான பொருட்கள், போர்வைகள் மற்றும் உணவு ஆகியவை அடங்கும்.…

‘இரட்டைத் தரம்’ – எதிர்க்கட்சிகளை மட்டுமே குற்றம் சாட்டுகிறது, ஆனால்…

இனம், மதம் மற்றும் ராயல்டி (3R) தொடர்பான விஷயங்களில் “இரட்டை தரம்”என்று பல பெரிக்கத்தான் நேசனல் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுஷன் இஸ்மாயில் கேள்வி நேரத்தின்போது கீழ்சபையில் PN  எம்பிக்கள் சம்பந்தப்பட்ட 3R வழக்குகளின் உதாரணங்களை மட்டும் மேற்கோள் காட்டிய பின்னர் இது வந்துள்ளது. “பக்காத்தான்…

காசா விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டிற்கு மலேசியா வருத்தம் தெரிவித்துள்ளது

காசாவில் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு ஆதரவளிக்க விரும்பாத பல மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டை எண்ணி மலேசியா வருந்துகிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்கள்மீதான அனைத்து வகையான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் மலேசியா…

ஜாஹிட்: PN இல் சேர அம்னோவை அழைக்க வேண்டிய அவசியமில்லை

பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ கட்சி ஒத்துழைக்க வசதியாக இருப்பதாக அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். எனவே, துணைப் பிரதமரும் BN தலைவருமான ஜாஹிட், பெரிகத்தான் நேசனலில் கூட்டணி சேருவது குறித்து எந்தக் கேள்வியும் இல்லை என்று கூறினார். "எங்களைப் பொறுத்தவரை,…

நிலம் கிடைக்க பதவியை பயன்படுத்தும் கட்சி தலைவர்களுக்கு எச்சரிக்கை –…

நெகிரி செம்பிலானில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு, மாநில அரசாங்கத்திடம் நிலம் கேட்டு தங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று நினைவூட்டியுள்ளார் டிஏபி பொதுச்செயலாளர் லோக் சியூ ஃபூக். நெகிரி செம்பிலான் டிஏபி மாநாட்டில் அவர் தனது உரையில், "எங்கள் சுயநலத்திற்காக எங்கள் பதவியை துஷ்பிரயோகம் செய்ய நாங்கள்…

இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் மனநல வழக்குகளை…

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் மனநல வழக்குகளின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான மனநல செயல் திட்டத்தை சுகாதார அமைச்சகம் உருவாக்க நடவடிக்கை. சிறார்களிடையே மனநலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவது கவலையளிக்கும் போக்கு, ஏனெனில் அவர்கள் நாட்டின் எதிர்காலத் தலைவர்கள் என்று அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார்.…

நஜிப்பிக்கு அரசு மன்னிப்பு வழங்க கோரி ஆதரவாளர்கள் போராட்டம்

2,000க்கும் மேற்பட்ட அம்னோ உறுப்பினர்கள் தேசிய மசூதிக்கு வெளியே கூடி கட்சியின் முன்னாள் தலைவர் நஜிப் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் "நஜிப் மீண்டும் வரவேண்டும்" என்ற வாசகம் தாங்கி வெள்ளை சட்டைகளை அணிந்திருந்தனர் மற்றும் முன்னாள் பிரதமருக்கு ஆதரவாக கோஷம்…

கெமாமன் வாக்கெடுப்பை பாஸ் தான் தவிர்க்க வேண்டும் – திரெங்கானு…

தோல்வியின் அவமானத்தைத் தவிர்க்க, வரவிருக்கும் கெமாமன் நாடாளுமன்ற இடைத்தேர்தலை கூட்டணி தவிர்க்க வேண்டும் என்று பெர்சத்து தகவல் தலைவர் ரசாலி இட்ரிஸ் பரிந்துரைத்ததை சாடியுள்ளார், திரெங்கானு பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மத் சைட். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் (GE15) லஞ்சக் கோரிக்கைகள் தொடர்பாக தேர்தல் நீதிமன்றம்…

மலேசியா  ஒரு மதச்சார்பற்ற நாடு அல்ல – துவான் இப்ராஹிம்

பாஸ் மாநாடு | முஸ்லீம் அல்லாத வாக்காளர்களை கவர விரும்பினால், மலேசியாவை மதச்சார்பற்ற நாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கின் முன்மொழிவை பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் நிராகரித்தார். துவான் இப்ராஹிம், டிஏபியின் தேர்தல் அறிக்கையானது, "மலேசியாவை…

அன்வாரின் ‘தூய்மையற்ற’ அரசாங்கத்தில் பாஸ் இணையாது

அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மத்திய அரசில் கட்சி இணையும் வாய்ப்பை பாஸ் நிராகரிக்கிறது என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார். அம்னோ பொதுச்செயலாளர் அசிரஃப் வாஜ்டி டுசுகியின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக ஹாடி இவ்வாறு கூறினார். பாஸ் அரசாங்கத்தில் உள்ள கட்சிகளையும் அதன் தலைமையையும் 'தூய்மைப்படுத்த'…

மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அரசு தீவிர அக்கறை காட்டவில்லை –…

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசு உண்மையானது அல்ல என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் விமர்சித்தார். பணவீக்கம் மற்றும் மக்களின் சுமையை உயர்த்தும் பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கவில்லை என்று ஹாடி கூறினார்.…

மலேசியா, பாலஸ்தீனம் காசாவில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிக்கு ஒப்புக்கொள்கிறது

காசாவில் எந்த விதமான வன்முறையையும் முடிவுக்குக் கொண்டுவர விரிவான முயற்சிகள் தேவை என்பதை மலேசியாவும் பாலஸ்தீனமும் ஒப்புக் கொண்டுள்ளன. பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸுடனான தனது தொலைபேசி உரையாடலின்போது காஸாவின் சமீபத்திய முன்னேற்றங்கள்குறித்து கலந்துரையாடும்போது இது எட்டப்பட்டதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். "பாலஸ்தீன மக்களுக்கு உடனடியாக மனிதாபிமான…

முஸ்லீம் அல்லாத வாக்காளர்களைப் பாஸ் வெற்றி பெற வேண்டும் –…

15வது பொதுத் தேர்தலில் மலாய் வாக்காளர்கள் மத்தியில் "பசுமை அலை" பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து, பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், முஸ்லிம் அல்லாதவர்களின் வாக்குகளை வென்றெடுக்க கட்சியை வழிநடத்துகிறார். "GE15 இல் மலாய் முஸ்லீம் வாக்காளர்களின் ஆதரவை நாங்கள் வெற்றிகரமாகப் பெற்றுள்ளோம், எனவே GE16…

பாஸ்  பற்றிய முஸ்லீம் அல்லாதவர்களின் கண்ணோட்டத்தை தூய்மை படுத்த தவறி…

முன்னாள் பாஸ்  இளைஞர் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி, மலாய்க்காரர்கள் அல்லாத மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களின் இஸ்லாமியக் கட்சியை நோக்கிய பார்வையை "தூய்மை படுத்தும் " தனது பணியில் தோல்வியுற்றதற்காக வருத்தமடைந்தார். வெளியேறும் இந்த இளைஞர் தலைவர், ஃபாத்லி, தனது இறுதி உரையில், (மேலே) தனது பதவிக்…

பகாங் அரசு இன்னும் கட்சித் தாவல் எதிர்ப்பு மசோதாவை எதிர்க்கட்சிகளுடன்…

பகாங் அரசாங்கம் அதன் கட்சித் தாவல் எதிர்ப்பு மசோதாவை எதிர்க்கட்சிகளுடன் தாக்கல் செய்வது குறித்து இன்னும் விவாதித்து வருகிறது என்று மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கூறினார். மாநில சட்டசபையில் பகாங் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்…