பிஎஸ்எம்: ரிம30 பில்லியன் ஒதுக்கீடு ஏழை பூமிகளுக்கும்கூட உதவப்போவதில்லை

Jayakumar1இனத்தின் அடிப்படையில் சமுதாயத்தைத் திருத்தி அமைப்பதானது மற்ற இனங்களின் ஏழை மக்களுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் நியாயமான செயலல்ல என்பது ஒரு புறமிருக்க அதே இனத்தைச் சேர்ந்த ஏழை மக்களுக்கும்கூட அது நியாயம் செய்வதாக இல்லை என்கிறார் மலேசிய சோசலிச கட்சியின் (பிஎஸ்எம்) தலைவர் ஒருவர்.

“அது, ஏழை பூமிபுத்ராக்களைக் காண்பித்து ஒதுக்கீடுகள் செய்வதை நியாயப்படுத்துகிறது. முடிவில் அந்த ஒதுக்கீடுகள் பணக்கார பூமிபுத்ராக்களுக்கும் ஆட்சியில் உள்ளவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் மட்டுமே உதவியாக அமைகின்றன”, என்று டாக்டர் ஜெயகுமார் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பூமிபுத்ராக்களின் பொருளாதார நிலையை உயர்த்த ரிம30 பில்லியன் ஒதுக்கப்படும் எனப் பிரதமர் அண்மையில் அறிவித்தது தொடர்பில் அவர் இவ்வாறு  எதிர்வினையாற்றியுள்ளார்.