பூமிகளுக்கு தனி வங்கி தேவை

1 bankபூமிபுத்ராக்களுக்கு தனி வங்கி ஒன்றை அமைக்க வேண்டும் என மலேசிய மலாய் வணிகர் சங்கம் (டிபிஎம்எம்) கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கம் அண்மையில் அறிவித்த பூமிபுத்ராக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான கொள்கையில் நடுத்தரத் தொழில் முனைவர்களுக்கு உதவும் திட்டம் இல்லை என்பதால் அப்படி ஒரு வங்கி தேவைப்படுவதாக டிபிஎம்எம் தலைவர் சைட் அலி அலாத்தாஸ் கூறினார்.

“ரிம 2பில்லியன் மூலதனத்துடன் அவ்வங்கி அமைக்கப்பட வேண்டும். ஒரு பில்லையனை அரசாங்கமும் இன்னொரு பில்லியனை மலாய்க்காரர்களும் வழங்க வேண்டும்”, என்றாரவர்.