‘ஜனநாயகமில்லாத டிஏபி’-கைரி சாடல்

1 khairiடிஏபி-இல் அம்னோவைப் போல் ஜனநாயகம் இல்லை  அதனால்தான் அது  மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறத் தவறிவிட்டது  என்று அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்  கூறுகிறார்.

பினாங்கு மலாய் காங்கிரஸ் தலைவர், ரஹ்மாட் இஷாக்,  டிஏபி-இலிருந்து விலகியது மலாய்க்காரர்கள் அக்கட்சியின்மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதைக் காண்பிக்கிறது  என்றாரவர்.

“அம்னோவை மலாய்க்காரர் கட்சி என்கிறார்கள்.  ஆமாம், அது அப்படித்தான்…….  டிஏபி எல்லாருக்குமான கட்சி என்று கூறிக்கொள்கிறது.  ஆனால்,  அக்கொள்கையைக் கடைப்பிடிப்பதில்லை”, என்று கைரி கூறியதாக பெரித்தா ஹிரியான் அறிவித்துள்ளது..