துப்பாக்கி வைத்திருப்பதாக சொன்னார் பங் மொக்தார்

1 bungமற்றவர்களை நாவால் சுட்டுக் காயப்படுத்துவதில் பேர் போனவர் பங் மொக்தார் ரடின்.  அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் அந்த எம்பி,  உண்மையிலேயே சுடும் ஆயுதத்தை, ஒரு துப்பாக்கியை வைத்திருக்கிறாராம்.

நாட்டில் குற்றச்செயல்கள் பெருகி வருவதால் கலக்கமடைந்துள்ள அந்த கினாபாதாங்கான் எம்பி,  இப்போது துப்பாக்கி இல்லாமல் வெளியில் போவதில்லையாம்.

இன்று பிற்பகல்  மக்களவையில், 1959ஆம் ஆண்டு குற்றத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது மீது நடைபெற்ற விவாதத்தின்போது பங் இத்தகவலை வெளியிட்டார்.

“இப்போது திட்டமிட்ட கொலைகளும் கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. துப்பாக்கி கனமாக இருப்பதால் முன்பு வெளியில் எடுத்துச் செல்வதில்லை…..ஆனால் சுடும் சம்பவங்களையும் கொலைகளையும் பார்க்கையில்…..

“சுட்டால் திருப்பிச் சுடுவேன்.  சும்மா (ஆயுமின்றி) சாகமாட்டேன்”, என்றாரவர்.

TAGS: