போலீசார் சுரண்டப்படும் பூர்வீகக் குடிமக்களை பாதுகாக்க வேண்டும்

suaramமுரும் அணைக்கட்டு கட்டப்படும் இடத்திற்குச் செல்லும் சாலையில் சுமார் 300 பெனான்கள் முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அந்த முற்றுகையை நிறுத்துவதற்கு கிட்டத்தட்ட 30 போலீசார் சென்றனர் என்று சுவராம் ஒருங்கிணைப்பாளர் தேவராஜன் இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

பெனான் சமூகத்தினர் எஸ்இபியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

பெனான் தலைவர் இங்காங் புலிங்கை கைது செய்ய போலீசார் அங்கு சென்றதாக கூறும் தேவராஜன், போலீசார் எச்சரிக்கை வேட்டு ஒன்றை வெடித்ததாகவும், இது பெனான் மக்களின் பிரச்னைகளை போலீசார் புரிந்து கொள்ளவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்றார்.

பெனான் மக்களை சுரண்டுகிறவர்களுக்கு ஆதரவாக செயல்படாமல் போலீஸ் படையினர் பெனான் மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் போலீஸ் படையினரை கேட்டுக் கொண்டார்.