கிழக்கு மலேசியாவில், கிறிஸ்துவர்கள்‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்தத் தடை இல்லை

josephசாபாவிலும் சர்வாக்கிலும் உள்ள கிறிஸ்துவர்கள் தங்கள் வழிபாட்டில் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைத் தாராளமாக பயன்படுத்தலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.  மலாய்மொழி பைபிளிலும் அச்சொல்லைப் பயன்படுத்தலாம்.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்வாறு முடிவு செய்யப்பட்டதாக பிரதமர்துறை அமைச்சர்  ஜோசப் குருப் கூறினார்  என சின் சியு டெய்லி தெரிவித்துள்ளது.

“முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு சபா, சரவாக் கிறிஸ்துவர்களிடையே அதிருப்தியையும் கவலையையும் உண்டுபண்ணி இருப்பதால் அமைச்சு அது பற்றி விவாதித்தது”, என்றாரவர்.

TAGS: