லாஹாட் டத்து ஊடுருவலுக்கு உத்தரவிட்ட சூலு சுல்தான் காலமானார்

1 suluசாபாவுக்குள் ஊடுருவும்படி தம் ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்ட சூலு சுல்தான் ஜமாலுல் கிராம்  III உறுப்புச் செயலிழப்பின் காரணமாக உயிர் இழந்தார்.

தம்மை சூலு  சுல்தான் எனச் சுயமாக பிரகடனம் செய்துகொண்டிருந்த  அவர், இன்று அதிகாலை மணி 4.30க்கு மரணமுற்றார் என அவரின் மகள் ஜேசல் கிரம் தெரிவித்ததாக பிலிப்பின்ஸ் என்குயரர் செய்தி வெளியிட்டிருந்தது.

“என் தந்தை எதைத் தொடங்கினாரோ அதை நாங்கள் தொடர்வதற்காக விட்டுச் சென்றிருக்கிறார்……

“…சாபாவை பிலிப்பினோக்களுக்கு மீட்டுத் தர வேண்டும் என்பதே அவரின் விருப்பமாகும்…..அதை நாங்கள் தொடர்வோம்”, என்றவர் கூறினாராம்.