மலேசிய இந்துக்கள் நாடுதழுவிய அளவில் இன்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்

Deepavali, Batucavesபத்துமலை வளாகத்தில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் பிரதமர் நஜிப்பும் அவரது துணைவியார் ரோஸ்மாவும் கலந்து கொண்டனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு அங்கிருந்தனர். மஇகா ஏற்பாடு செய்திருந்த இந்த திறந்தவெளி தீபாவளி கொண்டாட்டத்தில் சுற்றுப்பயணிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

காலை மணி 10.15 க்கு அம்னோ மற்றும் பிஎன் தலைவரான நஜிப்பு வந்து சேர்ந்ததும் அவருக்கு மேளதாளம் முழங்க பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

துணைப் பிரதமர் முகைதின் யாசின், அவரின் துனைவியார் நோரைனி, கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான், இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான மலேசியாவின் சிறப்புத் தூதர் ச. சாமிவேலு மற்றும் மசீச உதவித் தலைவர் டோனல்ட் லிம் சியாங் சாய் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களில் அடங்குவர்.

மஇகா தலைவர் ஜி. பழனிவேலும் துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியமும் விருந்தினர்களை வரவேற்றனர்.

TAGS: