பெர்சே-க்கு விரைவில் புதிய தலைவர்கள்

1-bersihதேர்தல் சீரமைப்பு இயக்கமான பெர்சே-க்கு  விரைவில் புதியவர்கள் தலைமையேற்பார்கள்.

நவம்பர் 30-இல் அதற்கான தேர்தல் நடைபெறும் என பெர்சே இயக்கக்குழு உறுப்பினர் மரியா சின் கூறினார்.

“பெர்சேயில் உள்ள என்ஜிஓ-களிலிருந்து அதற்கான நியமனங்கள் செய்யப்பட்டு விட்டன, முடிவு விரைவில் அறிவிக்கப்படும்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

தேசிய நிலையில் ஐந்து பதவிகளுக்கும் வட்டார நிலையில் ஆறு பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும். போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.