கடத்தப்பட்ட பிரிட்டிஷ் சிறுவன் கிடைத்து விட்டான்

நேற்று பங்சாரில் அவனின் தாயார் இல்லத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 20-மாதச் சிறுவனான பிரெட்டி ஜோசப், இன்று பிற்பகல் கிடைத்து விட்டான்.

அவன் தாமான் தித்திவங்சாவில் சோர்வுடனும் பசியுடனும் தத்தித் தத்தித் தனியே நடந்துசெல்வதை பேருந்து ஓட்டுனர் ஹமிட் முகம்மட் இசா,57, கண்டார்.

“அப்போதுதான் ஒரு சிறுவன் கடத்தப்பட்டது பற்றி செய்தித்தாளில் படித்தேன். அவன்தான் அந்தச் சிறுவன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

“அவனை அணுகியபோது, அமைதியாக இருந்தான்.  பயப்படவில்லை. ஆனால், மிகவும் சோர்வாக இருந்தான்”, என்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.