உதயகுமாரைச் சந்திக்க அவரின் குடும்பதாருக்கும் வழக்குரைஞருக்கும் அனுமதி மறுப்பு

udhayநேற்று நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட இண்ட்ராப் நடப்பில் தலைவர் பி.உதயகுமாரை, அவரின் குடும்பத்தாரும் வழக்குரைஞரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

நீதிமன்றம் அதற்கு அனுமதித்திருந்தாலும் போலீசார் அனுமதிக்கவில்லை என உதயகுமாரின் வழக்குரைஞர்  எம். மனோகரன் கூறினார்.

“காஜாங் சிறைச்சாலைச் சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டரும் ஏழெட்டு போலீஸ்காரர்களும் அவரைத் தரதரவென்று  இழுத்துச் சென்றுவிட்டனர். அவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள்”, என்றாரவர்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக காஜாங் சிறைச்சாலைமீது வழக்கு தொடுப்பது பற்றி மனோகரன் அலோசிக்கிறார்.