என்மீது அதிருப்தியா, தீர்மானம் கொண்டு வாருங்கள்’-பண்டிகார்

amin‘மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, தாம் குறைகூறலை ஏற்பதில்லை என்று கூறப்படுவதை மறுத்தார். தம்மீது மனநிறைவுகொள்ளாத எம்பிகள் தாராளமாக தீர்மானம் கொண்டுவரலாம் என்றாரவர்.

“ஒரு தீர்மானம் கொண்டு வந்து என் குறைநிறைகளை விமர்சிப்பதை வரவேற்கிறேன்”. இன்று பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரனை அவையிலிருந்து வெளியேறும்படி மீண்டும் உத்தரவிட்ட பின்னர் பண்டிகார் இவ்வாறு கூறினார். செவ்வாய்க்கிழமை சுரேந்திரனுக்கு விதிக்கப்பட்ட இரண்டு-நாள் இடைநீக்கம் காலை மணி 11.30க்குத்தான் முடிவுக்கு வரும் என்றாரவர்.

மக்களவை, இன்று சுரேந்திரனை ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் ஒன்றை விவாதிக்கிறது. செவ்வாய்க்கிழமை அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட சுரேந்திரன், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது பண்டிகாரை “ஒருதலைச்சார்பானர்” என்று கூறியதற்காக அவர்மீது இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.