சண்முகசிவா: “மருந்திலிருந்தும்…மனத்திலிருந்தும்…” நூல் வெளியீடு

Dr.M.Shanmugasivaமருத்துவர் மா. சண்முகசிவா எழுதியுள்ள “மருந்திலிருந்தும்…மனதிலிருந்தும்…” என்ற நூல் மைஸ்கீல்ஸ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் வெளியீடு காண்கிறது.

எதிர்வரும் சனிக்கிழமை மாலை நடைபெறும் இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ் அறவாரியம் ஆலோசகர் மற்றும் சுவாராம் என்ற மனித உரிமைக் கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் நூல் ஆசிரியர் அறிமுக உரை நிகழ்த்துகிறார்.

தமிழ் அறவாரியம் தலைவர் சி. பசுபதி சிறப்புரை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றி நூல் வெளியிடுபவர் உமா பதிப்பகம் உரிமையாளர் ஆ. சோதிநாதன்.

நிகழ்ச்சி விபரம்:

நாள்       : 30.11.2013 (சனிக்கிழமை)

நேரம்           : மாலை மணி 5.30 தொடக்கம்

இடம்      : கண்பார்வையற்றோர் சங்கம், பிரிக்பீல்ட்ஸ்

Kompleks MAB, Jalan Tebing,

Off Jalan Tun Sambanthan 4, Brickfields,

50470 Kuala Lumpur.

தொடர்புக்கு: 017 – 888 6877 / 03 – 2692 6533

இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கும்படி தமிழ்ப் பெருமக்களை மைஸ்கீல்ஸ் அறவாரியம் அன்புடன் அழைக்கிறது.