சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பளத்தில் 20விழுக்காட்டை கல்வி நிதிக்கு வழங்குவர்

anwarஅடுத்த ஆண்டு கணிசமான அளவு சம்பள உயர்வு பெறும் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் அதில் ஒரு பகுதியை மாநில கல்வி நிதிக்கு வழங்கலாம் என பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பரிந்துரைத்திருக்கிறார்.

இதன் தொடர்பில் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிமுடன் கலந்துபேசிய அன்வார், அவர்கள் ரிம1,000 அதாவது சம்பளத்தில் 20 விழுக்காட்டை ஏழைக் குழந்தைகளின் கல்விக்குக் கொடுக்கலாம் என்றார்.

“இந்த வழியில் அவர்கள் தங்களுக்குக் கிடைப்பதில் ஒரு பகுதியை மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கலாம்”, என்றாரவர்.