நஜிப்பின் புதல்வர் துயர்துடைப்பு மையத்தைப் பார்வையிட்டார்

sonபிஎன் உதவி என்ற முத்திரையுடன் கூடிய உதவிப் பொருள்களுடன் அக்கூட்டணியின் பிரதிநிதிகளாக பிரமுகர்கள் பலர், கிழக்குக் கரையில் துயர்துடைப்பு மையங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

நேற்று மாலை 5மணிக்கு, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மூத்த புதல்வர் முகம்மட் நிஜார்,  பெரும் பரிவாரம் புடைசூழ குவாந்தான்  துயர்துடைப்பு மையத்துக்கு வருகை புரிந்தார்.

அவர், ‘My Prime Minister Najib (என் பிரதமர் நஜிப்’ என்னும் வாசகம் பொறிக்கப்பட்ட டி-சட்டை அணிந்திருந்தார்.

நஜிப்பின் நாடாளுமன்ற தொகுதியான பெக்கானும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.