சிங்கப்பூர் கலகம் தொடர்பில் ஒரு மலேசியர் கைது

riotசிங்கப்பூரில்,  லிட்டல் இந்தியா பகுதியில்  நிகழ்ந்த  கலகம்  தொடர்பில் போலீஸ் கைது செய்துள்ள  27 பேரில்  ஒரு  மலேசியரும்  உள்ளிட்டிருக்கிறார்.

அக்கலகத்தில்,  ஐந்து மலேசியரும் காயமடைந்தனர்.  அவர்கள் சிங்கப்பூரில் துணை போலீஸ் அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள்  என வெளியுறவு அமைச்சர் அனிபா  அமான் கூறியதாக  ஆஸ்ட்ரோ அவானி  அறிவித்தது.

riot1சட்டம்,  ஒழுங்கு கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும்  சிங்கப்பூரில் கலகம்  நடப்பது அரிது. ஞாயிற்றுக்கிழமை  இரவு,  லிட்டல் இந்தியா பகுதியில்  இந்திய நாட்டைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேலு,33,  என்பார் ஒரு தனியார் பேருந்து ஒன்றால் மோதப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து கலகம் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

சுமார் 400 பேர் தெருவில் இறங்கிக் கலகம் செய்து பல போலீஸ் வாகனங்களைச் சேதப்படுத்தினார்கள், இரண்டு வாகனங்களைப் புரட்டிப் போட்டார்கள், ஒரு ஆம்புலன்ஸ் வண்டிக்குத் தீ வைத்தனர்.