தீபாவளிக்கு முதல்நாள் நாடாளுமன்றக் கூட்டம் இல்லை

அக்டோபர் 25, தீபாவளிக்கு முதல்நாள் என்பதால் அன்று மக்களவை கூடாது.

இதனை இன்று கேள்வி நேரத்துக்குமுன் அறிவித்த அவைத்தலைவர் பண்டிகார் அமின் மூலியா, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டதற்கிணங்க இம்முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.

தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள், தீபாவளிக்கு முதல்நாள் முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு)  படையல் படைப்பார்கள், மறுநாள் தீபத் திருநாள் உபசரிப்புக்கான ஏற்பாடுகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருப்பார்கள்.

இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது நாடாளுமன்றக் கூட்ட அட்டவணை தயாரிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் கடந்த வாரம்  குறைகூறியிருந்தார்கள்.