பெர்காசாவுக்கு அரசாங்கம் எவ்வளவு பணம் கொடுத்துள்ளது? நஜிப் அறிவிக்க வேண்டும்

pkr_n_surendran_01வலச்சாரி அமைப்பான பெர்காசாவுக்கு மக்கள் பணம் எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவிக்க வேண்டும் என பிகேஆர் வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றது உண்மைதான் என்று அவ்வமைப்பு ஒப்புக்கொண்டிருப்பதை அடுத்து பிகேஆர் இவ்வாறு கேட்டுக்கொண்டது.

“பெர்காசா ஒரு தீவிரவாத அமைப்பு, வெறுப்பை உண்டாக்கும் பேச்சுக்கும் இனப்பாகுப்பாட்டைத் தூண்டும் செயல்களுக்கும் அது பேர்போனது.

“அப்படிப்பட்ட ஓர் அமைப்புக்கு அரசாங்கம் பணம் கொடுத்து உதவுவது ஏன்?”, என பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் இன்று ஓர் அறிக்கையில் வினவி இருந்தார்.