கைரி: பிஎன் தலைவர்களின் இணைய அணுகுமுறை எடுபடவில்லை

1 khairiபிஎன் தலைவர்கள்  சிலரது  இணைய  அணுகுமுறை பொதுமக்களைக் கவரவில்லை  என்கிறார்  அம்னோ இளைஞர் தலைவர்  கைரி ஜமாலுடின். 

“பிஎன் தலைவர்கள் பலர்  சமூக  வலைத்தளங்களில்  ஆர்வத்துடன்  ஈடுபாடு  காட்டுவதைப்  பார்க்கிறேன்.  ஆனால், அவர்கள்  தங்கள்  ஆதரவாளர்களுடன்  பேசுகிறார்களே  தவிர அவர்களுக்கு  அப்பாற்பட்டவர்களுடன்,  யாரையும் சாராமல்  தனியே  இருப்பவர்களுடன்  பேசுவதாகத்  தெரியவில்லை- இப்படிச்  சொல்வதற்காக  மன்னிக்க  வேண்டும்.

“இது,  நம்முடைய  சமூக ஊடக  வியூகம்  எடுபடவில்லை  என்பதைக்  காண்பிக்கிறது. (பிஎன் தலைவர்கள்)  சொந்த  மக்களுடன் பேசி  ‘சுய திருப்தி’ காணும்  வேளையில்  எதிரணியினர்  பொதுமக்களைச்  சென்றடைய  முயல்கிறார்கள்”, என பெரித்தா ஹரியான்  நேர்காணல்  ஒன்றில் கைரி  கூறினார்.

சமூக  வலைத்தளங்களில்  அரசியல்வாதிகளின்  குடும்பத்தினர்  பற்றிக்  கருத்துரைப்பதையும்  தவிர்க்க  இயலாது.  

அது  கூடாது  என்பவர்கள்  அரசியலில்  இருக்கக் கூடாது  என்றாரவர்.

1 khairi.gif 2விலைவாசி உயர்வுமீது  மக்களின்  ஆத்திரம்  உண்மையானதே  என்று  குறிப்பிட்ட  கைரி  மக்களின்  மனத்தை  நோகடிக்கும்  வகையில்  தலைவர்கள்  கருத்துரைப்பதைத்  தவிர்க்க  வேண்டும்  எனக் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கம்,  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  அறிவுரைக்கிணங்க  விலைகளை  உயர்த்துவதை  விடுத்து  செலவுகளைக்  குறைக்க  வேண்டும் என்றாரவர்.